ADVERTISEMENT
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (26/11/2021) வடகிழக்கு பருவமழையையொட்டி, சென்னையில் பெய்துவரும் கனமழையால் புளியந்தோப்பு பகுதியில் சேதமடைந்த மழைநீர் வடிகால் சீரமைப்புப் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வுசெய்தார். அதைத் தொடர்ந்து, ஸ்டீபன்சன் திரு.வி.க. சாலையில் நடைபெற்றுவரும் பால பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.
ADVERTISEMENT
இந்த ஆய்வின்போது, தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு, இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், சட்டமன்ற உறுப்பினர்கள் தாயகம் கவி, இ. பரந்தாமன், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி இ.ஆ.ப., பெருநகர சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் இ.கா.ப., மற்றும் அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Show comments