ADVERTISEMENT

இன்று பொறியியல் கல்லூரி சேர்க்கை ஆணைகளை வழங்குகிறார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்!

08:51 AM Sep 20, 2021 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

7.5% இடஒதுக்கீட்டில் பொறியியல் கல்லூரிகளில் தேர்வான அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சேர்க்கை ஆணைகளை வழங்குகிறார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று (20/09/2021) காலை நடக்கும் நிகழ்ச்சியில் பி.இ. சேர்க்கை ஆணைகளை மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்குகிறார். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் க. பொன்முடி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT