அத்துடன், மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் பிரதமரிடம் முதலமைச்சர் அளிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கரோனா நோய்த்தொற்றால் செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவிற்கு பிரதமர் நரேந்திர மோடியை நேரில் அழைப்பு விடுக்க இயலாத நிலையில், தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி பயணம் மேற்கொள்கிறார்.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, இடதுசாரி கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தலைவர்களையும் முதலமைச்சர் சந்தித்துப் பேசவுள்ளதாக தகவல் கூறுகின்றன.