ADVERTISEMENT

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி! 

11:59 AM Jun 30, 2022 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

மதுரையில் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நடத்துவதற்கு ஒப்புதல் அளித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

சண்டிகரில் நடைபெற்ற 47வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் அடுத்த ஆலோசனை கூட்டம் ஆகஸ்ட் முதல் வாரத்தில் நடைபெறும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். அப்போது, தமிழ்நாடு விடுத்த கோரிக்கையை ஏற்று, அடுத்த கூட்டத்தை மதுரையில் நடத்த மத்திய நிதியமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கு நன்றி தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கோயில் நகர மக்கள் சார்பாக, மத்திய மற்றும் மாநில அமைச்சர்களை கோயில் நகர மக்கள் சார்பாக அன்புடன் வரவேற்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT