Skip to main content

சிதம்பரம் அருகே ஊராட்சி மன்ற அலுவலகம் 10 நாட்களாகப் பூட்டப்பட்டதால் பரபரப்பு!

Published on 03/08/2020 | Edited on 03/08/2020

 

Chidambaram

 

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே சிவபுரி ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் 836 வீடுகளும் 2,600 பொதுமக்களும் வசிக்கின்றனர். ஊராட்சி மன்றத் தலைவராக கடந்த உள்ளாட்சித் தேர்தலின்போது அன்புச்செல்வன் என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் பட்டியல் சமூகத்தைச் சார்ந்தவர். துணைத் தலைவராக மாற்று சமூகத்தைச் சேர்ந்த முத்துக்குமாரசாமி உள்ளிட்ட  பத்து உறுப்பினர்கள் உள்ளனர்.

 

இந்நிலையில், ஊராட்சி மன்றச் செயலாளராகப் பதவி வகித்து வந்த கண்ணன் என்பவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் பணி விடுப்பு எடுத்துச் சென்றுள்ளார். இதனால், தற்காலிகமாக அருகே உள்ள பெராம்பட்டு கிராம ஊராட்சி செயலாளர் வடிவேல் என்பவரை நியமித்து, அதிகாரிகள் உத்தரவிட்டிருந்தனர். வடிவேல் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு வட்டாரவளர்ச்சி அலுவலரிடம் ஊராட்சி தலைவர் மூலம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளாத வட்டார வளர்ச்சி அதிகாரிகள் அந்த ஊராட்சிக்கு வடிவேலை மீண்டும் நியமித்து உள்ளனர்.

 

இதனால் மன உளைச்சல் அடைந்த தலைவர் அன்புசெல்வன் ஊராட்சி மன்ற அலுவலகத்தைப் பூட்டுப் போட்டு பூட்டியுள்ளார். ஒட்டுமொத்தமாக ஊராட்சியின் வளர்ச்சிப் பணிகள் பாதித்தது. இதனை அறிந்த குமராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் மோகன் ராஜ் மற்றும் ராஜசேகரன் சம்பவ இடத்திற்கு விரைந்து ஊர்ப் பொது மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கிராம நிர்வாக அலுவலர் முன்னிலையில் ஊராட்சி மன்ற அலுவலகத்தின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தின் பூட்டை உடைத்து உள்ளே சென்றதால் பரபரப்பு நிலவியது.

 

இதுகுறித்து ஊராட்சி மன்றத் தலைவர் அன்புசெல்வன் கூறுகையில், "இந்த ஊராட்சியில் செயலாளராகப் பணியாற்றுபவர் கண்ணன், அவர் ஊராட்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஒப்பந்தப் பணிகளைச் செய்து வருகிறார். இவரால் ஊராட்சியில் உள்ள வேலைகளைப் பார்க்க நேரமில்லை என்று அவரது மனைவின் அக்கா தேவியை கடந்த 3 வருடமாகச் செயலாளர் பணியில் ஈடுபடுத்தியுள்ளார். இதனைதொடர்ந்து தேர்தல் மூலம் தேர்வு பெற்ற ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் தேவி பணியாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அவரை பணி செய்ய அனுமதிக்கவில்லை. இந்த நிலையில் குமராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள மண்டல வட்டார வளர்ச்சி அலுவலர் அருளானந்தம் எண்ணிடம் மிரட்டும் தோனியில் ஏன் தேவியை வைத்துப் பணி செய்தால் என்ன எனப் பேசினார். இதுகுறித்து பேச்சுவார்த்தையும் நடத்தினார். வார்டு உறுப்பினர்கள் எதிர்ப்பால் நான் அனுமதிக்கவில்லை. இதுதான் எதிர்ப்புக்கு காரணம். மேலும் ஊராட்சியில் எந்தக் கணக்கும் பராமரிக்கவில்லை. இதுகுறித்து ஊராட்சி செயலாளரிடம் கேட்டால் உங்கள் வேலையைப் பாருங்கள் இதை நான் பார்த்துக் கொள்கிறேன் என்கிறார்.

 

மீன்குளம் குத்தகை எடுப்பதில் அவர்கள் சொல்லும் நபருக்குக் கொடுக்கவேண்டும் என்பதால், அவர்கள் சொல்லும் இடத்தில் கையெழுத்து போட மிரட்டி நிர்பந்தம் செய்கிறார்கள். நான் பட்டியல் சமூகம் என்பதால் தொடர்ந்து அழுத்தம் கொடுக்கிறார்கள். இதுகுறித்து கடலூர் மாவட்ட ஆட்சியர், சிதம்பரம் சார் ஆட்சியருக்குப் புகார் கொடுத்துள்ளேன். தற்போது கண்ணன் விடுப்புக்குச் சென்றதால் பல்வேறு குற்றசாட்டுக்கு உள்ளான வடிவேலை செயலாளராக நியமித்துள்ளனர். இதற்கு வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இதுகுறித்து தீர்மானம் நிறைவேற்றி கொடுத்தால் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. இதனால் நான்அலுவலகத்தைப் பூட்டினேன். அதன் மேல் கண்ணன் தரப்பினரும் ஒரு பூட்டுபோட்டனர்" என்றார்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

ஸ்ரீமுஷ்ணம் பெண் கொலை சம்பவம்; காவல்துறை விளக்கம்

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 Police description on Srimushnam Woman Incident

கடந்த 19ஆம் தேதி முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அந்த வகையில், கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் வாக்களிக்க சென்ற போது பெண் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதற்கு பா.ஜ.க தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், பெண் கொலை வழக்கு தொடர்பாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. 

இது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ளதாவது, ‘கடந்த 19.042024 தேர்தல் நாளன்று மாலை 06.00 மணியளவில் ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட பக்கிரிமானியம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயகுமார் (47) என்பவரின் தம்பி ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியா ஆகியோர் ஓட்டு போட்டு விட்டு பக்கிரிமானியம் வாட்டர் டேங்க் அருகே வந்துகொண்டிருந்த போது, அதே ஊரைச் சேர்ந்த கலைமணி, ரவி, பாண்டியன், அறிவுமணி ஆகியோர் ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியாவை ஆபாச வார்த்தைகளால் கேலி கிண்டல் செய்துள்ளனர்.

மேற்படி இரு தரப்பிரனருக்கும் இடையே 2021 ஆம் ஆண்டில் பக்கிரமானியம் கிராமத்திலுள்ள மாரியம்மன் கோயில் திருவிழாவின் போது தகராறு ஏற்பட்டு கலைமணி. ஜெயகுமாரை தாக்கியது தொடர்பாக ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கலைமணி கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சூழலில் அன்றைய தினம் ஜெயபிரியாவை கேலி செய்ததை தொடர்ந்து ஜெயசங்கர், அவரது மூத்த சகோதரர் ஜெயக்குமார், ஜெயக்குமாரின் மனைவி கோமதி மற்றும் அவர்களது மகன்கள் சதீஷ்குமார், ஜெயபிரகாஷ் ஆகியோர் ஒருபுறமும் கலைமணி, அவரது மனைவி தீபா மற்றும் அவரது உறவினர்கள் ரவி, பாண்டியன், அறிவுமணி, அருள்செழியன், தர்மராஜ், மேகநாதன், ராஜா, விக்னேஷ் ஆகியோர் கலைமணி மீது ஏற்கெனவே போடப்பட்ட வழக்கை வாபஸ் பெறுவதான கலைமணியின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்க மறுத்ததற்காக வாக்கு வாதத்தில் ஈடுபட்டு ஒருவரையொருவர் தக்கிக்கொண்டுள்ளனர்.

இந்த விவகாரத்தில் கோமதி தலையிட்டு பிரச்னையைத் தடுக்க முயலும் போது, கீழே விழுந்து உள்காயம் ஏற்பட்டுள்ளது. கோமதியை முதலுதவி மற்றும் சிகிச்சைக்காக ஆண்டிமடம் அரசு மருத்துவமணைக்கு அழைத்துச் சென்றபோது, அவர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் ஜெயக்குமார் அவரது மகன்கள் ஜெயபிரகாஷ் மற்றும் சதீஷ் குமார் காயம் அடைந்தது காரணமாக மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக ஜெயக்குமார் என்பவரிடம் வாக்குமூலம் பதிவு செய்து பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

மேற்படி வழக்கின் புலன் விசாரணையிலிருந்து இச்சம்பவத்திற்கு ஜெயசங்கரின் மகளைக் கேலி கிண்டல் செய்ததும் கலைமணிக்கும், ஜெயக்குமார் மற்றும் ஜெயசங்கருக்கும் இருந்த முன்விரோதமே காரணம் என்பது இதுவரையில் விசாரித்த சாட்சிகளின் வாக்குமூலங்களில் இருந்தும் முதல் தகவல் அறிக்கை புகாரின் மூலமும் தெள்ளத்தெளிவாக தெரியவருகிறது. இது தவிர வேறு எந்தக் காரணமும் இதுவரை மேற்கொண்ட விசாரணையில் புலப்படவில்லை. மேலும் இவ்வழக்கில் இதுவரையில் ஐந்து எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

Next Story

“இந்தியாவின் மீட்பை தமிழகத்தில் இருந்து எழுதத் தொடங்கிய நாள்” - தொல்.திருமாவளவன்!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
today India redemption started writing from Tamil Nadu says Thirumavalavan

சிதம்பரம் நடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியில் திமுக தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் போட்டியிடுகிறார். இவர் தொகுதிக்குட்பட்ட அவரது சொந்த ஊரான அங்கனூர்  ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தனது தாயாருடன் வாக்களித்தார்.

இதனைதொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் வாக்குச்சாவடி மையத்திற்கு வெளியே வந்து பேசுகையில், இந்த தேர்தல் இரண்டு கட்சிகளுக்கு எதிரான தேர்தல் அல்ல. சங்‌பரிவார் மற்றும் இந்திய மக்களுக்கு இடையேயான தர்ம யுத்தம்.  நாட்டு மக்கள் வெற்றிபெற வேண்டுமென்பதற்காக இந்தியா கூட்டணி மக்கள் பக்கம் நிற்கிறது.‌ இந்திய அரசமைப்புச் சட்டத்தை பாதுகாக்க இந்தியா கூட்டணிக்கு ஆதரவளிக்க வேண்டும்.‌ நாடு முழுவதும் இந்தியா கூட்டணிக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.‌தமிழ்நாட்டில் 40க்கும் 40 இடங்களிலும் வெற்றி பெறும்.

கூட்டணி பலம், திமுக அரசின் மூன்றாண்டுகள் நலத்திட்டங்கள், இந்தியா கூட்டணியின் நோக்கங்களால் எங்கள் அணி மாபெரும் வெற்றி பெறும். இந்த தேசத்தின் மீட்பை தமிழகத்தில் இருந்து எழுதத் தொடங்குகிறோம் என்பதை அறிவிக்கும் நாள் இன்று. தமிழ்நாட்டுப் பெண்கள் திமுக அரசின் மீது நன்மதிப்பை கொண்டுள்ளனர். டெல்லியில் பாஜக வென்றால் மாநில அரசுகளை கலைக்கும் நிலை வரலாம், அப்படி நடந்தால் மகளிர் உரிமைத் தொகைக்கு ஆபத்து வரலாம்.‌ தேர்தல் ஆணையம் நேர்மையாக செயல்பட வேண்டும். ஆந்திரா, தெலுங்கானா கர்நாடகா மற்றும் கேரளாவில் பிரச்சாரத்தில் ஈடுபடுவேன். சிதம்பரம் தொகுதியில் பானை சின்னம் அமோக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும்” என்றார்.