ADVERTISEMENT

சென்னையில் செஸ் ஒலிம்பியாட்... தமிழக முதல்வர் மகிழ்ச்சி!

11:36 PM Mar 15, 2022 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னையில் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பு மகிழ்ச்சி தருவதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், 'செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னையில் நடைபெற இருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது. ஒலிம்பியாட் போட்டிகளை நடத்துவதில் தமிழ்நாடு பெருமை கொள்கிறது. செஸ் போட்டியில் பங்கேற்கும் வீரர்கள், வீராங்கனைகளை வரவேற்கிறது தமிழ்நாடு' என தெரிவித்துள்ளார். இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் 200 நாடுகளிலிருந்து இரண்டாயிரம் வீரர்கள் பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT