ADVERTISEMENT
ADVERTISEMENT
44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னை மாமல்லபுரத்தில் ஜூலை 28ஆம் முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதிவரை நடைபெற உள்ளது. இந்தத் தொடரில் மொத்தம் 200 நாடுகளைச் சேர்ந்த இரண்டாயிரம் வீரர்கள் பங்கேற்க உள்ளனர். செஸ் ஒலிம்பியாட் தொடரானது 1927ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வரும் நிலையில், முதன்முறையாக இந்தாண்டு இந்தியாவில் நடைபெறவுள்ளது.
அதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில், பாதுகாப்பு கருதி போட்டி நடைபெறும் பூஞ்சேரி பகுதியில் இன்று முதல் ட்ரோன்கள் பறக்கத் தடை விதித்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
Show comments