ADVERTISEMENT

"இப்ப வந்தா ஃப்ரீயா இருக்கும், அப்புறம்...?” - தீவுத்திடலில் களைகட்டும் பட்டாசு விற்பனை

04:34 PM Oct 19, 2019 | rajavel

ADVERTISEMENT

தீபாவளி பண்டிகையையொட்டி சென்னை தீவுத்திடலில் பட்டாசுகள் விற்பனை நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. இங்கு மொத்தம் 65 கடைகள் உள்ளன. பட்டாசுகளை வாங்க கார்களில் வருபவர்களுக்கு கார் பார்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது. பட்டாசுகள் உள்ளதால் உள்ளே செல்வதற்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அவை அங்கு வருபவர்களுக்கு தெரியும் வகையில் பேனர் ஒன்று வைக்கப்பட்டுள்ளது.

பட்டாசு கடை ஒன்றில் வேலை பார்க்கும் தினேஷ் என்பவர் நம்மிடம், ''கடந்த வருடத்தை விட இந்த வருடம் குறைவாகத்தான் சரக்குகள் இறங்கியுள்ளது. சிவகாசியில் ஆறு மாதம் விடுமுறை விட்டார்கள். மூன்று மாதம்தான் வேலை நடந்தது. அதில் இரண்டு மாதம் மழை பெய்திருக்கிறது. ஒரு மாதத்தில் வெடிகளை காயவைத்து தயார் செய்திருக்கிறார்கள். நேற்று முதல் கடைகள் தீவுத்திடலில் பட்டாசு விற்பனை கடைகள் திறக்கப்பட்டது. இன்னும் மக்களுக்கு சரியாக தெரியவில்லை. ஞாயிற்றுக்கிழமை மக்கள் பட்டாசுகளை வாங்க வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.

ADVERTISEMENT




காலை 8, 9 மணியில் இருந்து இரவு 12 மணி வரை கடைகள் திறந்திருக்கும். மொத்தம் 60ல் இருந்து 70 கடைகள் உள்ளன. கிப்ட் பாக்ஸ், ஸ்டாண்டர்டு என இருக்கிறது. 16 வகை பட்டாசுகள் உள்ள கிப்ட் பாக்ஸ் 270 ரூபாய், 60 வகை பட்டாசுகள் உள்ள கிப்ட் பாக்ஸ் 900 ரூபாய் வரும். அனைத்து தரப்பு மக்களும் வாங்கும்படிதான் பட்டாசுகள் வந்துள்ளன. இந்த வருடம் பட்டாசு புகையினால் சுற்றுப்புறம் மாசுபடாத வகையில் பசுமை பட்டாசுகள் அறிமுகம் செய்யப்படுகின்றன. தீவுத்திடலில் விற்பனை செய்யப்படும் பட்டாசுகள் குறிப்பிட்ட அளவு தள்ளுபடி விலையில் விற்கப்படும். கையில் இருக்கும் காசுக்கு ஏற்றதுபோல் இங்கு பட்டாசுகள் உள்ளன. இந்த தீபாவளி அனைவருக்கும் நல்ல தீபாவாளியாக அமைய வேண்டும் என்று வாழ்த்துக்கள்'' என்றார்.


மாதாவரத்தில் இருந்து பட்டாசுகள் வாங்க வந்த சீனிவாசன், ''கடந்த வருடம் சிவகாசியில் நேரடியாக பர்சேஸ் செய்தோம். பின்னர் பத்தவில்லை என்று தீவுத்திடலில் பட்டாசுகள் வாங்கினோம். இந்த வருடம் தீவுத்திடலில் வாங்க முன்னதாகவே வந்துவிட்டேன்.ஆனால் போன வருடத்தை விட இந்த வருடம் விலை கொஞ்சம் அதிகமாகத்தான் உள்ளது. டிஸ்கவுண்ட் பண்ணித்தான் கொடுக்கிறார்கள். முன்னதாகவே வந்ததால் கூட்ட நெரிசல் இல்லாமல் பொறுமையாக பட்டாசுகளை பார்த்து எடுக்க முடிகிறது. போன வருஷத்தைவிட இந்த வருடம் 60 ஷாட், 70 ஷாட் வந்திருக்கிறது என்று சொல்லுகிறார்கள். பசுமை பட்டாசுகள் வந்திருப்பதாக சொன்னார்கள். இவைகள் பற்றிய விழிப்புணர்வு இன்னும் பொதுமக்களிடம் அதிகம் வர வேண்டும்'' என்றார்.

அம்பத்தூரில் இருந்து வந்திருந்த பிரசாத், பட்டாசு கடைகள் போட்டு இரண்டு நாட்கள்தான் ஆகிறது. அதனால்தான் கூட்ட நெரிசலுக்கு முன்பு வந்து வாங்கிவிட்டோம். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு விலை அதிகமாகத்தான் இருக்கிறது. இருந்தாலும் டிஸ்கவுண்ட் கொடுக்கிறார்கள். பசங்களுக்காக பேன்ஸி பட்டாசுகள் அதிகம் வந்திருக்கிறது. குழந்தைகள் இதனை விரும்பி வெடிப்பார்கள். நான் ரூபாய் எட்டாயிரத்துக்கு பர்சேஸ் பண்ணினேன் என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT