ADVERTISEMENT

பிற்பகலில் தொடங்குகிறது புறநகர் ரயில் சேவை!

03:23 PM Nov 26, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT

'நிவர்' புயல் காரணமாக ரத்து செய்யப்பட்ட புறநகர் சிறப்பு ரயில் சேவைகள் இன்று (26/11/2020) பிற்பகல் 03.00 மணிக்கு தொடங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ''நிவர்' புயல் காரணமாக ரத்து செய்யப்பட்ட புறநகர் சிறப்பு ரயில் சேவைகள் இன்று (26/11/2020) பிற்பகல் 03.00 மணிக்கு தொடங்கி இரவு 08.00 மணி வரை, ஒரு மணி நேரத்திற்கு ஒரு புறநகர் சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.

அதன்படி, சென்னை சென்ட்ரல்- அரக்கோணம், அரக்கோணம்- சென்னை சென்ட்ரல், சென்னை சென்ட்ரல்- கும்மிடிப்பூண்டி, கும்மிடிப்பூண்டி- சென்னை சென்ட்ரல், சென்னை கடற்கரை- செங்கல்பட்டு, செங்கல்பட்டு- சென்னை சென்ட்ரல் ஆகிய ரயில் நிலையங்களுக்கு இடையே ஒரு மணி நேரத்திற்கு ஒரு புறநகர் சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT