ADVERTISEMENT

சென்னையில் காய்கறி, மளிகைக் கடைகள் திறந்திருக்கும்- சென்னை மாநகராட்சி!

01:29 PM Mar 18, 2020 | santhoshb@nakk…

சென்னை மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "சென்னையில் பால், காய்கறிகள், பழங்கள், மளிகை விற்பனை செய்யும் சிறு வணிக நிறுவனங்கள் வழக்கம் போல் இயங்கும். இறைச்சி மற்றும் மீன் விற்பனை கடைகளும் தொடர்ந்து செயல்படும். கடைகள் அனைத்தும் மூடப்படுவதாக பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம். கடைகள் மூடப்படுவதாக வதந்தி பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

ADVERTISEMENT

>

ADVERTISEMENT

கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெரிய வணிக நிறுவனங்களை மட்டுமே மூட உத்தரவு; சிறிய கடைகளுக்கு அல்ல. சென்னையில் மால்கள், சினிமா தியேட்டர்களை மட்டுமே மூடியிருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மக்களின் நலன் கருதியே பெரிய வணிக நிறுவனங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது." இவ்வாறு சென்னை மாநகராட்சி குறிப்பிட்டுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT