ADVERTISEMENT
ADVERTISEMENT
சென்னையில் புறநகர் ரயில் சேவையைத் தொடங்க அனுமதிக்கக் கோரி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஸ் கோயலுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில், புறநகர் ரயில் சேவை பொதுமக்களுக்கு மிகவும் உதவியாக இருப்பதோடு, பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும் உதவும். புறநகர் ரயில் சேவையைத் தொடங்கக் கோரி செப்டம்பர் 2- ஆம் தேதியே தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது. கரோனா தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, ரயில்கள் இயங்க உறுதிச் செய்யப்படும். புறநகர் ரயில் சேவையைத் தொடங்குமாறு, தெற்கு ரயில்வே-க்கு உத்தரவிட கடிதத்தில் முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
Show comments