ADVERTISEMENT

காரை விரட்டி சென்ற சுங்கச்சாவடி ஊழியர் உயிரிழப்பு!

11:14 AM Jun 30, 2019 | santhoshb@nakk…

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பரனுர் தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடி ஒன்றில் வந்த கார் சுங்க வரி கட்டணம் கட்டாமல் வேகமாக சென்றது. சுங்க வரி கட்டணம் செலுத்தாமல் வேகமாக சென்ற காரை துரத்திய சுங்கச்சாவடி ஊழியர் வினோத் எதிர்பாராத விதமாக மேம்பாலத்தில் இருந்து விழுந்து உயிரிழந்தார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

இது போன்ற சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுங்கச்சாவடி ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதே போல் சுங்கச்சாவடியில் பணியாற்றும் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என அனைத்து தரப்பினரும் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT