ADVERTISEMENT

உயர்நீதிமன்றம் மற்றும் அதன் மதுரைக் கிளையில் பிப்.8 முதல் நேரடி விசாரணை!

05:04 PM Feb 03, 2021 | santhoshb@nakk…

ADVERTISEMENT


சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பிப்ரவரி 8- ஆம் தேதி முதல் நேரடி விசாரணை நடைபெறும் என்று சென்னை உயர்நீதிமன்றப் பதிவாளர் அறிவித்துள்ளார்.

ADVERTISEMENT

சென்னை உயர்நீதிமன்றத்தின் பதிவாளர் இன்று (03/02/2021) வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பிப்ரவரி 8- ஆம் தேதி முதல் வழக்குகள் நேரடியாக விசாரிக்கப்படும். வழக்கறிஞர்கள் விரும்பினால் காணொளியிலும் ஆஜராகலாம். இறுதி வழக்குகள் மட்டுமே நேரடி விசாரணையில் காலை, மாலை என இரு வேளைகளில் நடைபெறும். பிற வழக்குகள் காணொளியில் மட்டுமே நடைபெறும்; ஒரு மணி நேரத்தில் 5 வழக்குகளை மட்டுமே விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு வழக்கிற்கு இரண்டு வழக்கறிஞர்கள் வீதம் (நீதிமன்ற அறை பரப்பளவைப் பொறுத்து) 6 முதல் 10 வழக்கறிஞர்கள் அனுமதிக்கப்படுவர். அரசின் விதிமுறைப்படி வழக்கறிஞர்களுக்கான உணவகங்களைத் திறந்துகொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT