திருப்பூரைச் சேர்ந்த அழகுமலை கிராமப்பகுதியில் உள்ள பட்டியலின மக்களுக்குச் சொந்தமான 12 ஏக்கர் பஞ்சமி நிலம் உள்ளிட்ட கிராம நத்தம் மற்றும் கோவில் நிலங்களை, முத்துச்சாமி கவுண்டர் என்ற தொழிலதிபர் ஆக்கிரமித்து, அந்நிலங்களில் கல்யாண மண்டபம், மசாஜ் மையங்கள் அமைத்ததுடன், தீண்டாமை இரும்புத் தடுப்பு வேலிகள் அமைத்ததாக, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைப்பு காவல்துறையினரிடம் 2018-ல் புகார் அளித்தது.
இவ்வாறு பஞ்சமி நில பாதுகாப்பு விவகாரத்தில் அரசியல் சாசனத்திற்கு விரோதமான பரிந்துரைகளை முருகன் வழங்கி இருப்பதாகவும், அதை ரத்து செய்து பஞ்சமி நிலங்களை மீட்டு பட்டியலின மக்களிடம் ஒப்படைக்க உத்தரவிடக் கோரியும் மனுவில் கோரிக்க வைத்திருந்தார்.
இந்த வழக்கு கடந்த ஜூலை மாதம் விசாரணைக்கு வந்தபோது, தேசிய பட்டியலின ஆணையமும் அதன் துணைத் தலைவர் முருகனும் பதிலளிக்க உத்தரவிடப்பட்டிருந்தது. இன்று (12/03/2020) இந்த வழக்கு மீண்டும் நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, ஆக்கிரமித்ததாகக் கூறப்படும் தொழிலதிபர் முத்துசாமி தரப்பில் பதிலளிக்க கால அவகாசம் கேட்கப்பட்டதால் வழக்கு 2 வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.