ADVERTISEMENT

சென்னை உயர்நீதிமன்றத்தில் 8 நிரந்தர நீதிபதிகள் பதவியேற்பு!

01:00 PM Mar 17, 2020 | santhoshb@nakk…

சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் எட்டு பேர் நிரந்தர நீதிபதிகளாக இன்று (17/03/2020) பதவியேற்றுக் கொண்டனர்.

ADVERTISEMENT

சென்னை உயர்நீதிமன்றத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்ட நீதிபதிகள் பி.டி.ஆஷா, எம்.நிர்மல்குமார், என்.ஆனந்த் வெங்கடேஷ், ஜி.கே.இளந்திரையன், கிருஷ்ணன் ராமசாமி, சி.சரவணன், பி.புகழேந்தி, செந்தில்குமார் ராமமூர்த்தி மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் ஆகிய 9 பேரையும் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகள் அடங்கிய கொலிஜியம் பரிந்துரைத்தது. இந்தப் பரிந்துரையை ஏற்று 9 நீதிபதிகளையும் நிரந்தர நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

ADVERTISEMENT

இவர்களில், நீதிபதி சுப்பிரமணியம் பிரசாத் டில்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக பணிமாற்றம் செய்யப்பட்டதால், மீதமுள்ள எட்டு நீதிபதிகளும், இன்று (17/03/2020) நிரந்தர நீதிபதிகளாகப் பதவியேற்றனர். அவர்களுக்கு தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

சென்னை உயர்நீதிமன்றத்தில், அனுமதிக்கப்பட்ட 75 நீதிபதி பணியிடங்களில், தற்போது 21 இடங்கள் காலியாக உள்ளன.


Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT