ADVERTISEMENT

சென்னை, திருவள்ளூரில் கனமழை!

09:28 AM Oct 20, 2019 | santhoshb@nakk…

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால் பெரும்பாலான மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதை தொடர்ந்து சென்னையில் கிண்டி, அசோக் நகர், ஈக்காட்டுத்தாங்கல், வடபழனி, கோயம்பேடு, நுங்கம்பாக்கம், அண்ணாநகர், தியாகராய நகர், கே.கே நகர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

ADVERTISEMENT

ADVERTISEMENT


அதே போல் திருவள்ளுவர் மாவட்டத்தில் செங்குன்றம், புழல், மாதவரம் பொன்னேரி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருவதின் காரணமாக சாலையில் மழைநீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளன. இதனிடையே சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT