தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டதவர்களின் எண்ணிக்கை 7,204 ஆக அதிகரித்துள்ளது. இதில் 1,959 பேர் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 47 பேர் உயிரிழந்தனர்.
அதன்படி, சென்னையில் ராயபுரம் மண்டலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 676 ஆக அதிகரித்துள்ளது. ராயபுரம் மண்டலத்தில் நேற்று (10/05/2020) ஒரேநாளில் 105 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கோடம்பாக்கத்தில் புதிதாக 67 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதால் மொத்த எண்ணிக்கை 630 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் திரு.வி.க. நகரில் மேலும் 37 பேருக்கு கரோனா உறுதியானதால் மொத்த பாதிப்பு 556 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் மட்டும் 3,839 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 743 பேர் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 28 பேர் உயிரிழந்துள்ளனர். மற்ற 3,050 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்வாறு சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.