chennai corporation coronavirus zones

நேற்று (04/06/2020) இரவு 07.00 மணி நிலவரப்படி, தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27,256 ஆக அதிகரித்துள்ளது. இதில் 14,902 பேர் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 220 பேர் உயிரிழந்தனர். மற்ற 12,134 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றன. குறிப்பாகசென்னையில் கரோனாவால் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் எந்தெந்தப் பகுதியில் எத்தனை பேருக்கு கரோனா என்பதை மண்டலம் வாரியாகப் பட்டியலை வெளியிட்டுள்ளது சென்னை மாநகராட்சி.

Advertisment

Advertisment

அதன்படி, சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,388 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் கோடம்பாக்கம் மண்டலத்தில் 2,123, திரு.வி.க.நகர் 1,855, திருவொற்றியூர் 670, மாதவரம் 490, தண்டையார்பேட்டை 2,261, அம்பத்தூர் 684, தேனாம்பேட்டை 2,136, வளசரவாக்கம் 975, அண்ணாநகர் 1,660, அடையாறு 1,042, பெருங்குடி 334, சோழிங்கநல்லூரில் 339, ஆலந்தூர் 289, மணலி 259, மற்ற மாவட்டங்களுக்கு மாற்றி அறிவிக்கப்பட்ட நோயாளிகள் 188 பேர் என மொத்தம் 18,693 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

chennai corporation coronavirus zones

இதில் 9,392 பேர் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 166 பேர் உயிரிழந்துள்ளனர். மற்ற 8,947 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்வாறு சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.