ADVERTISEMENT

7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

10:29 AM Nov 20, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் மதியம் 1 மணிக்குள் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை காரணமாகத் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணிக்குள் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. திருவள்ளூர், காஞ்சிபுரம், நாகப்பட்டினம், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மழை தொடரும் ” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இன்று (20.11.2023) காலையில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், ராமநாதபுரம் ஆகிய 9 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகம் மட்டுமின்றி புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் மழை தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT