ADVERTISEMENT

செயின் பறிப்பு - ஆசிரியை படுகாயம்

03:34 PM Oct 30, 2018 | sekar.sp


விழுப்புரம் மாவட்டம், உளூந்தூர் பேட்டையைச் சேர்ந்தவர் சூசைநாதன். இவரது மனைவி மெட்டிலா. இவர் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள காம்பட்டு அரசு நடுநிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இன்று காலை வழக்கம்போல் பள்ளிக்கு சென்றார்.

ADVERTISEMENT

பள்ளிக்கு சென்ற அவரை பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள், ஆசிரியையின் கழுத்திலிருந்த 12 பவுன் சங்கிலியை பறித்து விட்டு அவரை மோட்டார் சைக்கிளிலிருந்து கீழே தள்ளிவிட்டு சென்றனர். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த ஆசிரியை உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT