Skip to main content

கர்ப்பிணிக்கு மருந்து கொடுக்கும் விழா... பிரியாணியால் பறிபோன உயிர்

Published on 07/10/2022 | Edited on 07/10/2022

 

The ceremony of giving medicine to the pregnant woman

 

திருவாரூரில்  பிரியாணி சாப்பிட்டவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்தார். 

 

திருவாரூர் அருகே புலிவலம் பகுதியை சேர்ந்த விக்னேஷ் என்பவரின் கர்ப்பிணி மனைவிக்கு மருந்து கொடுக்கும் விழா நடைபெற்றது. விழாவில் இருபத்தைந்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். விழாவில், விருந்தினர்கள்  உண்பதற்கு பிரியாணி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

 

விழா முடிந்ததும் பிரியாணி சாப்பிட்டவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இதனை அடுத்து இருபதுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 15 பேரின் உடல்நலன் சீரானதும் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினர். கடுமையாக உடல் நலம் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த 6 பேரில் செல்வமுருகன் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து இறந்தவரின் உடலை பிரேத பரிசோதனைக்கு செய்வதற்கு அனுப்பிவைத்தனர். மேலும் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 


 

சார்ந்த செய்திகள்