இரண்டாம் நாளாக நேற்று பல இடங்களில் மத்தியக் குழு ஆய்வு செய்தது. இந்த நிலையில் புயல் வெள்ள பாதிப்பை ஆய்வு செய்து மத்தியக் குழு தமிழக முதல் மு.க.ஸ்டாலினை இன்று சந்தித்து ஆலோசனை மேற்கொள்ள இருக்கின்றனர். அதே நேரம் வெள்ள நிவாரண தொகையாக 6 ஆயிரம் ரூபாய் தருவது தொடர்பாக சென்னையில் கூட்டுறவு பணியாளர்களுக்கு இன்று பயிற்சி வழங்கப்பட இருக்கிறது.
சம்பந்தப்பட்ட உணவுப் பொருள் வழங்கல் துறை அலுவலகங்களில் சார்பதிவாளர்களால் இந்த பயிற்சி தரப்பட உள்ளது. சென்னை வடக்கு மண்டலத்தில் 6000 ரூபாய் நிவாரண வழங்க 590 ரேஷன் கடைகளுக்கு நான்கு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. நியாய விலை கடை உரிமையாளர், கூடுதல் பணியாளர் உட்பட நான்கு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக கூட்டுறவுத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் நிவாரணம் ரூ.6000 வழங்குவதற்கான டோக்கன் இன்று முதல் வழங்கப்பட உள்ளது.