ADVERTISEMENT
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராக இருந்த பி.எஸ். ஞானதேசிகன், உடல்நலக் குறைவு காரணமாக கடந்த நவம்பர் 11-ஆம் தேதி சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (15.01.2021) சிகிச்சை பலனின்றி காலமானார்.
ADVERTISEMENT
த.மா.கா. மூத்த தலைவரும் முன்னாள் எம்.பி.யுமான பி.எஸ்.ஞானதேசிகன் மறைவிற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர். மேலும், சென்னையில் வைக்கப்பட்டிருக்கும் அவரது உடலுக்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், நக்கீரன் ஆசிரியர் உள்ளிட்ட பிரமுகர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
மேலும், இன்று (16.01.2021) மதியம் சென்னை பெசன்ட் நகர் மயானத்தில் அவரது உடல் இறுதி சடங்குகளுடன் தகனம் செய்யப்பட இருக்கிறது.
Show comments