Skip to main content

உ.பி vs தமிழ்நாடு; ஆளுநர் ரவியை விமர்சித்த கே.எஸ். அழகிரி 

Published on 13/02/2023 | Edited on 13/02/2023

 

ks alagiri talk about governor rn ravi and bjp

 

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற பிரதமர் மோடி குறித்த புத்தக வெளியிட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, “நாம் சமூக நீதி பற்றி அதிகம் பேசுகிறோம். ஆனால் நடப்பது அதற்கு நேர்மாறாக இருக்கிறது. மக்கள் குடிக்கும் குடிநீர் தொட்டியில் இயற்கை உபாதைகள் கழிப்பது உள்ளிட்ட செயல்கள் தற்போது வரை தொடர்ந்து நடைபெற்றுதான் வருகின்றது” என்றார்.

 

இந்நிலையில் ஆளுநர் ஆர்.என். ரவியின் கருத்து குறித்து பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, “பாஜக மிகப் பெரிய சதி செய்கிறார்கள். அரசியல் கருத்துகளை பிரதமர் மோடி, ஜே.பி. நட்டா, அண்ணாமலை ஆகியோர் சொல்லட்டும். அதற்கு நாங்கள் பதில் சொல்ல தயாராக இருக்கிறோம். ஆனால் ஒரு ஆளுநர் எப்படி அரசியல் கருத்துகளை சொல்வது. நீங்கள் உங்கள் மரபுகளைத் தாண்டி பேசுவதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.

 

இந்தியா முழுவதும் தீண்டாமை இருக்கிறது. ஆனால் தீண்டாமைக்கு எதிராக நாம் எடுத்த நடவடிக்கைகள்தான் முக்கியம். நாம் தீண்டாமையை எதிர்த்து நிறைய போராட்டங்களையும், தியாகங்களையும் செய்திருக்கிறோம். தமிழகத்தில் இதுவரை முற்போக்கு கட்சிகள் தீண்டாமையை ஆதரித்தது கிடையாது. அங்கொன்றும், இங்கொன்றும் தீண்டாமை குற்றங்கள் நடைபெறுகிறது. அதனை நான் மறுக்கவில்லை. ஆனால் தீண்டாமையை இந்த அரசு எதிர்க்கிறது. ஆனால் தீண்டாமையில் உத்தரப் பிரதேசம் மற்றும் பாஜக ஆளும் பிற மாநிலங்கள் எப்படி இருக்கிறது; தமிழ்நாடு எப்படி இருக்கிறது என்று ஒப்பிட்டு பார்க்க வேண்டும்.  தமிழகத்தின் முதல் முதலமைச்சர் முதல் இன்று இருக்கும் முதலமைச்சர் வரை தீண்டாமைக்கு எதிராக இரும்புக் கரம்கொண்டு செயல்பட்டிருக்கிறோம்.

 

தீண்டாமையை பற்றி பேச நீங்கள் யாரு... நீங்கள்தான் சனாதனம் என்ற பெயரில் தீண்டாமையை உருவாக்கினீர்கள். உங்களால் இந்து மதத்தின் தலைவராக ஒரு பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவரை நியமிக்க முடியுமா? சங்கராச்சாரியாருக்கு பதிலாக ஒரு பட்டியலினத்தவரை அந்த இடத்தில் அமர வைக்க முடியுமா? ஆர்.எஸ்.எஸ் அதை ஏற்றுக் கொள்ளுமா? ஆனால் காங்கிரஸ் செய்திருக்கிறது. பெரியார் செய்திருக்கிறார். பொதுவுடைமை கட்சிகள் செய்திருக்கிறது. அதற்கு பெயர்தான் சீர்திருத்தம், சமூக நீதி” என்று பேசியிருக்கிறார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Union Minister Amit Shah visits Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 4 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகிறார். அதன்படி ஏப்ரல் 4 ஆம் தேதி மதுரை மற்றும் சிவகங்கை மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். அதனைத் தோடர்ந்து ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னையில் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

Next Story

“காவிரி நீர் வேணுமா... ஈரோட்டில் கூட காவிரி ஓடுது பாருங்க...” - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பதிலால் எழுந்த விமர்சனம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'Oh Cauvery water...? Even in Erode, see the Cauvery running'- Criticism caused by EVKS Elangovan's response

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

ஈரோட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசுகையில், ''ஸ்டாலின் தலைமையில் அமைந்திருக்கின்ற கூட்டணி என்பது சாதி மதங்களைக் கடந்த கூட்டணி. மத வெறித்தனத்திற்கு அப்பாற்பட்ட கூட்டணி. மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும், எல்லா மதத்தைச் சார்ந்தவர்களும் ஒன்றாக இருக்க வேண்டும் என்ற ஒரு நல்ல கொள்கைக்காக தான் இந்த கூட்டணி இருக்கிறது.

மற்ற கூட்டணிகளை எடுத்துக் கொண்டால் குறிப்பாக பாஜக கூட்டணியில் இருக்கின்ற கூட்டணியாக இருந்தாலும் சரி, அதிமுக தலைமையில் இருக்கின்ற கூட்டணியாக இருந்தாலும் சரி அவர்கள் கொள்கைக்காக ஒன்று சேரவில்லை. சில கோடி ரூபாய் பேரம் பேசி பெறுவதற்காக அந்த கூட்டணியில் இருக்கிறார்கள்'' என்றார்.

அப்பொழுது செய்தியாளர் ஒருவர், 'ஒரு சொட்டு தண்ணீர் கூட தரமாட்டேன் என்று சொல்கின்ற காங்கிரசுக்கு பத்து சீட்டுகள் கொடுத்தது நியாயமா என சீமான் கேள்வி எழுப்பி உள்ளாரே' எனக் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த இளங்கோவன், ''இல்லை காங்கிரசினுடைய கொள்கையே ஒரு சொட்டு நீர் கூட கொடுக்கக் கூடாது என்பதுதான். மக்கள் குடிப்பதால் கெட்டுப் போயிருக்கிறார்கள். மக்களுடைய சிந்தை மாறி போயிருக்கிறது. அதனால் காங்கிரசை பொறுத்தவரை எங்களுடைய மகாத்மா காந்தியினுடைய கொள்கையே ஒரு சொட்டு மது தண்ணீர் கூட மக்களுக்கு கொடுக்கக் கூடாது என்பதுதான்'' என்றார்.

உடனே செய்தியாளர் 'காவிரி தண்ணீர்' என சொல்ல, ''காவிரி தண்ணீரா... காவிரி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஈரோட்டில் இருக்கின்ற காவிரி ஆற்றை பார்த்தீர்கள் என்றால் கூட, இன்னைக்கு பாருங்கள் இருக்கின்ற பாறை எல்லாம் மறைக்கும் அளவிற்கு தண்ணீர் போய்க் கொண்டிருக்கிறது. வேண்டிய அளவிற்கு தண்ணீர் தர கர்நாடகா தயாராக இருந்தாலும் அவர்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு இருக்கின்ற காரணத்தால் சில தடங்கல்கள் இருக்கிறது'' என்றார்.

காவிரி நீர் குறித்த கேள்விக்கு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கொடுத்த பதிலுக்கு சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்து வருகிறது.