ADVERTISEMENT
காஞ்சிபுரம் அருகே வையாவூர் அண்ணா அவென்யூ பகுதியை சேர்ந்த கோமதி, சிபிசிஐடியில் முதல் நிலை காவலராக பணிபுரிந்தார். 12 வயதில் பெண் குழந்தை உள்ள நிலையில், குடும்ப பிரச்சனையால் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து 6 மாதத்துக்கு முன்பு இருவரும் விவாகரத்து பெற்றனர்.
ADVERTISEMENT
கணவரை பிரிந்ததால் மனஉளைச்சலில் இருந்ததாக கூறப்படும் கோமதி, வீட்டில் உள்ள அறையில் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. தகவலின்பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாமுண்டீஸ்வரி விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
Show comments