ADVERTISEMENT

முதல்வரின் வாகனத்தை தொடர்ந்து சென்ற வாகனங்கள் விபத்து!

06:38 PM Jan 04, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு மாவட்டங்களில் தேர்தல் பிரச்சாரப் பயணத்தைத் தொடர்ந்து நடத்திவருகிறார். இந்நிலையில் இன்று தூத்துக்குடியில் இருந்து சேரன்மகாதேவிக்குச் சென்றபோது, முதல்வரின் காரை பின்தொடர்ந்து சென்ற (Convoy) காரில் அவரது கட்சியினர் அணிவகுத்துச் சென்றனர். அப்பொழுது ஏற்பட்ட விபத்தில் இரண்டு கார்கள் சிக்கியது.

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு என்ற பகுதியில் முதல்வரின் கார் சென்றபோது அவரது காரை பின்தொடர்ந்து கட்சியினர் கார்களில் சென்றனர். அப்பொழுது சாலையின் நடுவே உள்ள தடுப்பில் கார் ஒன்று மோதி நின்றது. பின் வந்த வாகனங்கள் மிகவும் வேகமாக வந்ததால் ஒன்றன் மீது ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றாலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் இந்த விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். மாடு ஒன்று குறுக்கே வந்ததால், இந்த விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. விபத்து தொடர்பான வீடியோ காட்சிகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT