திருச்சி டி.வி.எஸ். டோல்கேட் பகுதியில் இரவு 7.30 மணியளவில் பாலத்தின்மீது கார் சென்று கொண்டிருந்தது. பொன்மலை ரயில்வே பாலம் பழுது காரணமாக, போக்குவரத்தில் மாற்றம் செய்திருப்பதால் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. அப்போது திடீரென இவர்களது காரின் முன்பகுதியிலிருந்து கரும்புகை வந்துள்ளது. இதனையடுத்து சுதாரித்த ஓட்டுநர் உடனடியாக அனைவரையும் கீழே இறங்கச்சொல்லியுள்ளார். காரிலிருந்து அனைவரும் இறங்கிய சற்று நேரத்தில் காரின் முன்பகுதியில் திடீரென தீ பற்றி எரிந்துள்ளது.
உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கன்டோன்மென்ட் தீயணைப்பு நிலைய அலுவலர் சத்தியவர்த்தன் தலைமையில் சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புத் துறையினர், தீ மேலும் பரவாமல் அணைத்தனர். என்றாலும் கார் முற்றிலும் சேதமானது. ஓட்டுநரின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் அனைவரும் காரிலிருந்து இறங்கியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். இது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.