ADVERTISEMENT
ADVERTISEMENT
வரும் பிப். 25 முதல் அரசுப் பேருந்து போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஊதிய உயர்வு, பணி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற இருப்பதாகவும் போக்குவரத்துச் சங்கங்கள் தெரிவித்துள்ளன.
இந்த அறிவிப்பின் காரணமாக பொதுமக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. நாளை ஒருநாள் மட்டுமே இடையில் இருப்பதால் அரசுக்கும், போக்குவரத்து ஊழியர்களுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடக்க வாய்ப்பு இருக்குமா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.
ADVERTISEMENT
Show comments