ADVERTISEMENT

லாரியை முந்த முயன்ற பேருந்து விபத்து..10 க்கும் மேற்பட்டோர் காயம்.

10:56 AM Nov 06, 2019 | Anonymous (not verified)

சென்னையில் இருந்து தருமபுரி நோக்கி தமிழக அரசு பேருந்து நவம்பர் 5 ந்தேதி மாலை சென்றுக்கொண்டு இருந்தது. தங்க நாற்கர சாலையில் வேலூர் மாவட்டம், சென்னை - வேலூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பிள்ளையார்குப்பம் பகுதியில் பேருந்து செல்லும்போது முன்னால் சென்ற லாரியை முந்தி செல்ல முயன்றுள்ளார் ஓட்டுநர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT


ஆனால், எதிர்பாராத விதமாக முன்னால் சென்றுக்கொண்டுயிருந்த லாரி மீது பேருந்து மோதியது. மோதியதில் அரசு பேருந்தில் பயணித்த 10-க்கும் மேற்பட்டோர் காயம்.


பேருந்தின் முன்பக்கம் நொருங்கியது. இதில் பேருந்தின் முன் பக்கத்தில் சிக்கிய அரசு பேருந்து ஓட்டுனரை பயணிகள், வாகன ஓட்டிகள் மீட்டு வேலூர் அரசு மருத்துவயனைக்கு அனுப்பிவைத்தனர். காயம்பட்டு மீட்கப்பட்டவர்கள் வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து குறித்து சத்துவாச்சாரி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT