Skip to main content

அதிமுக இஸ்லாமியர்களுக்கு எதிரியில்லை - அமைச்சர் நிலோபர்கபில் பேச்சு

Published on 07/11/2019 | Edited on 07/11/2019

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி நகரில் அதிமுக சார்பில் உள்ளாட்சி தேர்தலுக்கான நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் வீரமணி மற்றும் நீலோபர்கபீல் பங்கேற்று நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினர். இந்த கூட்டத்தில் ஆலங்காயம், வாணியம்பாடி, நாட்றம்பள்ளி, உதயேந்திரம் பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்துக்கொண்டனர்.

 

 AIADMK is no enemy to Muslims - Minister Nilobargabil

 

இந்த கூட்டத்தில் பேசிய அமைச்சர்  நீலோபர் கபீல், உள்ளாட்சித் தேர்தலில் நாம் வெற்றி பெற வேண்டுமானால் நிர்வாகிகள் ஒவ்வொரு வார்டு வார்டாக  சென்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் வகுத்துக் கொடுத்த திட்டங்களை தொடர்ந்து அதிமுக அரசு செயல்படுத்தி வருவதை மக்களிடத்தில் எடுத்துச் சொல்லி வாக்குகளை சேகரிக்க வேண்டும். இஸ்லாமிய மக்கள் அதிமுகவுக்கு எதிரி என்பது போல் காட்டுகிறார்கள். அதிமுக அரசு என்றென்றும் இஸ்லாமிய மக்களுக்கான அரசு என்பதை மக்களிடம் விளக்கமாக சொல்ல வேண்டும்.

 

 AIADMK is no enemy to Muslims - Minister Nilobargabil

 

வேலூர் மேற்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான வீரமணி பேசும்போது, முதல்வரும், துணை முதல்வரும் இணைந்து கட்சியை வலுப்படுத்தி விட்டனர். இதற்குமேல் அதிமுகவை ஒன்றும் செய்ய முடியாது என்பதை ஸ்டாலின் அறிந்து கொண்டார். வருகின்ற உள்ளாட்சி தேர்தல் உட்பட எந்த தேர்தலாக இருந்தாலும் வெற்றி பெறுவது அதிமுகதான் என்பது மக்களுக்கும் தெரியும், திமுக தலைவர் ஸ்டாலினுக்கும்  தெரியும். அதனால்தான் அவர் பயந்து போய் இப்போதே அவருடைய மகனை அரசியலுக்கு கொண்டு வந்து முக்கியத்துவம் அளித்து வருகிறார். நடந்து முடிந்த பாராளமன்ற தேர்தலிலும், இடைத்தேர்தலிலும் நாம் சில தவறுகளை செய்துள்ளோம். தவறுகள் நடந்ததை மறந்து வரும் உள்ளாட்சித் தேர்தலில் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட்டு அனதை்து இடங்களிலும் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

ரூ. 20 லட்சம் வரை சொத்து சேர்த்த பஞ்சாயத்து கிளார்க்; லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Anti-corruption department raids panchayat clerk house

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த திருவலம் பகுதியை சேர்ந்தவர் பிரபு. இவர் காட்பாடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் பஞ்சாயத்து கிளார்க்காக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் தற்போது பொன்னை அடுத்த பாலேகுப்பத்தில் பஞ்சாயத்து கிளார்க்காக பணியில் உள்ளார்.

2011 - 2017 ஆகிய இடைப்பட்ட காலகட்டத்தில் பணியின் போது வருமானத்திற்கு அதிகமாக சுமார் 20 லட்சம் வரை சொத்து சேர்த்ததாக வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையினர் பிரபு மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனை அடுத்து இன்று வேலூர் லஞ்ச ஒழிப்புத் துறையினர் காட்பாடி அடுத்த திருவலம் பகுதியில் உள்ள பஞ்சாயத்து கிளார்க் பிரபு என்பவரின் வீட்டில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த சோதனையில் வங்கி பரிவர்த்தனை மற்றும் சொத்து தொடர்பான ஆவணங்கள், பிரபுவின் வருமானம் தொடர்பான ஆவணங்களை கைப்பற்றியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.