பேராவூரணியில் அபூர்வ வகை வெண்கலத்தினாலான, புத்தர் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
பேராவூரணி பேரூராட்சி, செங்கொல்லை பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவர் செவ்வாய்கிழமை காலை, அருகில் உள்ள நாட்டாணிக்கோட்டை முனிக்கோயில் குளத்தில் குளிக்கச் சென்றார். அப்பொழுது அவரது காலில் ஏதோ பொருள் இடறியது. இதையடுத்து அவர் அதை எடுத்துப் பார்த்தபோது, சுமார் அரை அடி உயரத்தில், ஒன்றரை கிலோ எடையுள்ள வெண்கலத்தால் ஆன அபூர்வ வகை புத்தர் சிலை என்பது தெரியவந்தது.
இதையடுத்து முருகேசன் அந்த புத்தர் சிலையை, பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகம் சென்று, வட்டாட்சியர் எல்.பாஸ்கரனிடம் ஒப்படைத்தார். இந்த சிலை எப்படி இந்த குளத்திற்கு வந்தது. வேறு எங்கேனும் திருடப்பட்டு, இங்கு வந்து போடப்பட்டதா அல்லது பழங்காலத்தை சேர்ந்த புராதன சிலையா. இப்பகுதியில் வழிபாட்டில் இல்லாத புத்தர்சிலை இங்கு கிடைத்த மர்மம் என்ன என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments