/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/artcovermonk-759x500-in.jpg)
மும்பையின் மேற்கு பகுதியில் உள்ள ராம்தேகி வனப்பகுதியில் தியானம் செய்து கொண்டிருந்த 35 வயது புத்த மத துறவியை சிறுத்தை ஒன்று அடித்து கொன்றுள்ளது. சிறுத்தை புலி நடமாட்டம் அதிகம் உள்ள இப்பகுதியை ஏற்கனவே பாதுகாக்கப்பட்ட இடமாக வனத்துறை அறிவித்துள்ளது. ஆபத்தான பகுதி என்ற அதிகாரிகளின் எச்சரிக்கையையும் மீறி 3 புத்த துறவிகள் தியானம் செய்ய சென்றுள்ளனர். அதில் ஒருவரை சிறுத்தை தாக்கி கொன்றுள்ளது. இதனை பார்த்த மற்ற இருவரும் தப்பித்து சென்று காவல்துறையிடம் தகவல் கூறியுள்ளனர். அதன் பின் அங்கு வந்த காவல்துறையினர் அவரது உடலை தேடி கண்டுபிடித்தனர். 825 ச.கி.மீட்டர் பரப்பளவு கொண்ட இந்த வனப்பகுதியில் இந்த மாதம் மட்டும் இது போன்ற 5 சம்பவங்கள் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)