ADVERTISEMENT

பொள்ளாச்சியில் கல்லூரி மாணவி கொடூர கொலை:நான்கு தனிப்படை அமைப்பு

09:13 PM Apr 06, 2019 | kalaimohan

கோவை பொள்ளாச்சி அருகே தாராபுரம் சாலையில் பிரகதி என்ற மாணவி கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டள்ளார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

கல்லூரிக்கு சென்ற மாணவியை காணவில்லை என பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்த நிலையில் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்த மாணவி சடலத்தை கைப்பற்றிய போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுவருகின்றனர். மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

ஏற்கனவே பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை அதனையடுத்து கோவை துடியலூரில் 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை இப்படி பரபரப்பை ஏற்படுத்திவந்த நிலையில் தற்போது சாலையில் மாணவி கொலை செய்யப்பட்டு சடலம் கண்டெடுக்கப்பட்டது மேலும் அப்பகுதியில் பெரும் அச்சத்தையும், பரபரப்பையும் கூட்டியுள்ள நிலையில் இந்த வழக்கு தொடர்பாக கொலை செய்த நபர்களை பிடிக்க நான்கு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக எஸ்பி சுஜித் குமார் தெரிவித்துள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT