நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய ரஃபேல் விமான பேர ஊழல் தொடர்பாக ஆதாரங்களுடன் எழுதப்பட்ட புத்தகத்தை நேற்று மாலை இந்து என்.ராம் வெளியிடவிருந்த நிலையில், அந்தப் புத்தக வெளியீட்டுக்கு தடைவிதிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி, பாரதி புத்தகாலயத்தின் விற்பனை நிலையத்திற்குள் புகுந்து அங்கிருந்த 200 புத்தகப் பிரதிகளையும் போலீஸார் பறிமுதல் செய்திருந்தனர்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
இந்நிலையில் புத்தகங்களை தடை செய்தற்காகவும், பறிமுதல் செய்தற்காகவும் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் தேர்தல் பணிகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். உதவி மேற்பொறியாளர் கணேஷ் மற்றும் காவல் உதவி ஆய்வாளர், 2 காவலர்கள் தேர்தல் பணியியல் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் புத்தகத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், காவலர்கள் என மொத்தம் 4 பேரும் இதுகுறித்து விளக்கமளிக்க தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
Show comments