ADVERTISEMENT

பிணவறையில் குவித்து வைக்கப்பட்ட உடல்கள்; முகம் சுழிக்கும் மக்கள்

04:38 PM Sep 09, 2023 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் உள்ள பிணவறையில் இடவசதி இல்லாததால் தரையிலேயே சடலங்கள் அடுக்கி வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதன் காரணமாக மருத்துவமனை வளாகத்தின் மற்ற பகுதிகளில் துர்நாற்றம் வீசுவதாக நோயாளிகள் மற்றும் மருத்துவமனைக்கு வருபவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் பெரும்பாலும் தினமும் செங்கல்பட்டு அரசு தலைமை மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில் மருத்துவமனையில் பிணவறையில் உடல்கள் அதிகமாக வைக்கப்பட்டிருக்கிறது. அதே நேரம் சரியான இடவசதி இல்லாததால் குவியல் குவியலாக பண்டல்களைப் போல இறந்த உடல்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக பக்கத்தில் உள்ள வார்டுகளுக்கும் துர்நாற்றம் வீசுவதாக மருத்துவமனைக்கு வந்து செல்பவர்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். உடனடியாக உடல்களை உரியவர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுப்பதோடு, பிணவறைக்கான கட்டிட வசதியை மேலும் விரிவுபடுத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். சடலங்கள் ஒன்றின் மீது ஒன்று குவிந்து கிடக்கும் அந்த வீடியோ காட்சி ஒன்றும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT