ADVERTISEMENT
ADVERTISEMENT
விருதுநகரில் ஆளுநருக்கு கருப்புக்கொடி காட்ட சென்ற திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.
விருதுநகர் ஆட்சியர் அலுவலகத்துக்கு பொதுமக்களிடம் மனுபெற ஆளுநர் செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதனைதொடர்ந்து, மாநில அரசின் உரிமைகளில் ஆளுநர் நேரடியாக தலையிடுவதற்கு கண்டனம் தெரிவித்து திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். மேலும் காங்கிரஸ் உட்பட திமுக தோழமை கட்சியினர் ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர்.
Show comments