ADVERTISEMENT

மனதின் குரல் நிகழ்வைப் பார்க்க அழைப்பு விடுத்த பாஜகவினர் (படங்கள்)  

04:35 PM Apr 28, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

பிரதமர் நரேந்திர மோடி பேசும் ‘மனதின் குரல்’ 100வது நிகழ்ச்சி வரும் ஞாயிற்றுக்கிழமை (30.04.2023) அன்று ஒளிபரப்பாகிறது. இதனை முன்னிட்டு இந்த நிகழ்ச்சியானது சென்னை மெரினா நடு குப்பத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இந்த நிகழ்ச்சியைக் காண வருமாறு பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கும் வகையில் அதன் முன்னேற்பாடாக நடு குப்பத்தில் உள்ள அனைத்து குடும்பங்களையும் நேரடியாக கலந்து கொள்ள திருமணத்திற்கு அழைப்பது போன்று அழைப்பிதழை அச்சடித்து நாதஸ்வர மேள தாளங்களுடன் பெண்கள் பட்டுப் புடவையுடன் தமிழர் பாரம்பரிய முறையில் தாம்பூலத் தட்டுடன் வெற்றிலை, பாக்கு, இனிப்பு, பழங்களுடன் அழைப்பிதழை நேரடியாக வைத்து பாஜகவினர் அழைப்பு விடுத்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT