அதே போல, முக்கிய பூஜைகள் செய்வதற்காக தனது குடும்பத்தினருடன் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு வந்திருந்தார் பாஜக பிரமுகரும் முன்னாள் எம்.பி.யுமான நரசிம்மன். தேசிய அளவில் பாஜக மூத்த தலைவர்களுடன் நெருக்கமாக இருப்பவர் இவர். திருச்செந்தூர் கோவிலுக்கு இவரும் செல்ல, நயன்தாராவும் நரசிம்மனும் அருகருகே அமர்ந்தபடி பூஜைகளில் கலந்துகொண்டனர். தனது அருகில் இருப்பது பிரபல நடிகை நயன்தாரா என்பதை அறிந்து, தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார் நரசிம்மன்.
நயன்தாராவும் சகஜமாக நரசிம்மன் குடும்பத்தினரோடு அலாவுலாயிருக்கிறார். இதனை அடுத்து அரசியல் ரீதியாக நயன்தாராவிடம் பேசிய அவர், "உங்களைப் போன்ற திரைக்கலைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும். உங்களுக்கான சிறந்த கட்சி பாஜக தான். பாஜகவில் இணைந்த திரைபிரபலங்களுக்கு உரிய மரியாதையை பாஜக தரும். சினிமாவின் புகழை வெறும் நடிப்பு என்பதோடு நிறுத்தி விடாதீர்கள். அந்த புகழை வைத்து சமூகத்தின் நலன்களுக்காகப் பாடுபட வேண்டும். அதனால் அரசியலுக்கு வர வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார் நரசிம்மன்.