ADVERTISEMENT
வடக்கிழக்கு பருவ மழை காரணமாக தமிழ்நாடு முழுக்கப் பரவலாக மழை பெய்துவருகிறது. சென்னை உட்பட பல்வேறு இடங்களில் குடியிருப்பு பகுதிகளுக்குள் மழை நீர் புகுந்துள்ளதால், மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். சென்னை, வள்ளுவர் கோட்டம் பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிப்படைந்த பகுதியை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நேரில் பார்வையிட்டார். மேலும், அப்பகுதி மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments