ADVERTISEMENT

''மக்களிடம் வரி வசூல் செய்ய வேண்டிய சூழல்'' - இல.கணேசன் கருத்து   

03:21 PM Feb 20, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

சமீப காலமாகவே பெட்ரோல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னை போன்ற பெருநகரங்களில் வரலாற்றில் முதல்முறையாக பெட்ரோல் விலை 90 ரூபாயைக் கடந்துள்ளது. பெட்ரோல் விலையுயர்வால் மக்களின் அடிப்படை அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் உருவாகும் சூழலில், விலைவாசி ஏற்றம் குறித்த அச்ச உணர்வு அதுவும், இந்தக் கரோனா காலத்தில் மக்களிடையே மேலோங்கியுள்ளது என்றும் கூறலாம்.

இந்நிலையில் திருப்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மூத்த தலைவர் இல.கணேசன், பெட்ரோல் டீசல் விலையுயர்வு குறித்த கேள்விக்கு, ''காங்கிரஸ் ஆட்சி விட்டுச் சென்ற கடனை அடைக்க மக்களிடம் வரி வசூல் செய்ய வேண்டிய சூழல் இருக்கிறது'' எனக் கூறினார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT