இதனைத் தொடர்ந்து இலட்சுமிபுரம் பகுதி பொதுமக்கள் நேற்று முன்தினம் முரளியைத் தாக்கிய சருத்துப்பட்டியைச் சேர்ந்தவர்களைக் கைது செய்யக் கோரி தேனியிலிருந்து பெரியகுளம் செல்லும் தேதிய நெடுஞ் சாலையில் திரண்டுசாலை மறியலில் ஈடுபட்டனர். அப்பொழுது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்களை சருத்துப் பட்டியைச் சேர்ந்தவர்கள் எனக் கருதி இரண்டு பேரையும் இலட்சுமிபுரத்தைச் சேர்ந்தவர்கள் சரமாரியாகத் தாக்கினர்.
காவல்துறையினர் அவர்களைமீட்டு விசாரித்தபோது இவர்கள் இருவரும் பெரியகுளம் தென்கரை இந்திராபுரியைச் சேர்ந்த அஜித்குமார் மற்றும் சுரேந்தர் ஆகியோர் என்பது தெரியவந்தது. அவர்கள் இருவரும், பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனையறிந்த இவர்களது உறவினர்கள் பெரியகுளம் மூன்றாந்தல் பகுதியில் நேற்று அஜித்குமார், சுரேந்தர் ஆகியோரை த் தாக்கிய இலட்சுமிபுரத்தைச் சேர்ந்தவர்களை கைதுசெய்யக் கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். இத்தகவல் அறிந்த பெரியகுளம் காவல் துணைக்கண்காணிப்பாளர் ஆறுமுகம் தலைமையில்பேச்சு வார்த்தை நடத்தியதில் குற்றவாளிகளை கைது செய்வதாகக் கூறியதையடுத்து மறியலைக்கை விட்டனர்.
அப்போது காவல்துறையினர் மற்றும் அந்த பகுதிமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு பின்மோதலாக மாறி காவல்துறையினர் தடியடி நடத்தவே சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கல்வீசித் தாக்கியதில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் உட்பட காவலர்கள் 10 பேர் காயமடைந்து பெரியகுளம் அரசுமருத்துவமனையிலும், தேனி க.விலக்கு அரசுமருத்துவ கல்லூரி மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதில் காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் கண் அருகில் பலத்த காயம் ஏற்பட்டதால் அவரை தேனி மருத்துவமனையில் இருந்து மேல் சிகிச்சைக்காக மதுரை மருத்துமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.இதனைத் தொடர்ந்து இலட்சுமிபுரம், சருத்துப்பட்டிஆகிய பகுதிகளில் தாக்கப்பட்டவர்களும், தாக்கியவர்களும், வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் பதட்டம் நிலவுகின்றது. மேலும் பதட்டத்தைத் தணிக்க நூற்றுக்கும் மேற்பட்டகாவல்துறையினர் குவிக்கப்பட்டு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குற்றவாளிகளை கைது செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மோதலில் ஈடுபட்டவர்களை விட்டுவிட்டு வீட்டில் தூங்கி கொண்டிருந்தவர்களை காவல்துறையினர் அத்துமீறி தாக்கியதில் சருத்துப்பட்டியை சேர்ந்த ஜெயக்கண்ணண், முத்து, முத்துநாகு, காளியம்மாள் ஆகிய நான்கு பேர்களை 20 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் வீட்டின் மாடியில் ஏறி குதித்து வந்து தாக்கியதாக குற்றசாட்டு எழுந்துள்ளது. இவர்களும் தேனி அரசுமருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இச்சம்பவம் தேனி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.