Skip to main content

எடப்பாடி நிகழ்ச்சிகளில் ஜேப்படி!-கோஷம் போடுபவர்களிடம் கைவரிசை!

Published on 19/09/2019 | Edited on 19/09/2019

முன்புபோல் கிடையாது. ஜெயலலிதா ரேஞ்சுக்கு தன்னை உயர்த்திக் காட்டிக்கொள்வதில் இப்போது ஆர்வமாக இருக்கிறார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அவர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கவேண்டும் என்று கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. அதுபோல், வழிநெடுகிலும் அதிக அளவில் காக்கிகளை நிறுத்தி பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டுமென்று ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.  அதனால், வெளியூர் ஆட்களைத் திரட்டிவந்து கெத்து காட்டுகிறார்கள் அடிபொடிகள்.  

 

incident in chief minister function



இந்த விதத்தில் கூட்டம் சேர்க்கும்போது, சில ஜேப்படி திருடர்களும் ஊடுருவி கைவரிசை காட்டிவிடுகிறார்கள். இப்படித்தான் பெரியார் பிறந்தநாளான 17-ஆம் தேதி, ஜெமினி மேம்பாலம் அருகிலுள்ள பெரியார் சிலைக்கு மரியாதை செய்து, அதன் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பெரியாரின் படத்திற்கு  மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள் முதல்வர் இ.பி.எஸ்.ஸும், துணை முதல்வர் ஓ.பி.எஸ்.ஸும். அப்போது, கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி தி.நகர் அதிமுக பிரமுகர் ஒருவரின் பக்கத்தில் நின்ற ஆசாமி, ரூ.16,000-ஐ பிக்பாக்கெட் அடித்தார். அதை அருகிலிருந்த ஒருவர் கவனித்துவிட்டார்.  அந்த நபரைக் கையும் களவுமாகப் பிடித்து காக்கிகளிடம் ஒப்படைத்தனர்.

முதல்வரும், துணை முதல்வரும் பெரியார் சிலைக்கு கீழே வைக்கப்பட்டிருந்த உருவப்படத்திற்கு மலர் தூவியபோது, 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டிருந்தனர். அத்தனை கெடுபிடிகளையும் தாண்டி ஜேப்படி செய்த அந்த பலே ஆசாமியை,   தேனாம்பேட்டை காவல் நிலையத்திற்கு விசாரணைக்காகக் கொண்டு சென்றனர். அப்போது அந்த ஜேப்படி ஆசாமி “கட்சி கரை வேட்டி கட்டிக்கிட்டு கூட்டத்தோடு கூட்டமாக பலரும் கோஷம் போடுறப்ப.. நானும் கோஷம் போட்டுக்கிட்டே செல்போன், பணம்னு கைக்கு சிக்கியதை அபேஸ் பண்ணிருவேன்.” என்றிருக்கிறார்.

ஜெமினி மேம்பாலம் பெரியார் சிலை அருகில் தமிழக முதல்வர் பங்கேற்ற நிகழ்ச்சியில்  ஜேப்படி செய்த முருகன் பிடிபட்டபோது “நம்ம கட்சி தலைமை அலுவலகத்திலும் இதேபோல் ரெண்டு பேரைப் பிடித்துக் கொடுத்தோம். இப்போதும், அதேமாதிரி ஒருவன் சிக்கியிருக்கிறான்.” என்று முணுமுணுத்துவிட்டுச் சென்றார் ஒரு அதிமுக தொண்டர்.  

தேனாம்பேட்டை போலீசார் நடத்திய விசாரணையில், தி.நகர் அதிமுக 114-வது வட்ட செயலாளர் சின்னையாவிடமிருந்து ரூ.16000-ஐ பிக்பாக்கெட் அடித்தவர் கோவை – சீத்தாநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த அதிமுக உறுப்பினர் முருகன் என்பது தெரிய வந்திருக்கிறது.

தான் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில், திரட்டப்படும் கூட்டத்தில் ஜேப்படி ஒருபுறம் நடக்கிறது என்பது எடப்பாடிக்குத் தெரியுமா? இதற்குமுன், அவருக்குத் தெரியாமல் பார்த்துக்கொண்ட காக்கிகள், முருகன் விஷயத்திலோ கைது நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அ.தி.மு.க தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்!

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Edappadi Palaniswami appeals to ADMK volunteers

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24)தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது. 

இந்த நிலையில், கட்சி வேட்பாளர்களுக்கும், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கும் வேட்பாளர்களின் தனி முகவர்கள் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தொண்டர்களுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிமுக 1972-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்டது. இந்த இயக்கம் கண்ட முதல் வெற்றியே நாடாளுமன்ற மக்களவையின் திண்டுக்கல் தொகுதிக்கு 1973-ல் நடைபெற்ற இடைத் தேர்தல் வெற்றி தான் என்பது நமக்கெல்லாம் நன்கு நினைவில் இருக்கிறது.

இந்த இயக்கத்தின் நாடாளுமன்ற வரலாற்றில் மிக அதிகபட்சமாக, மக்களவை, மாநிலங்களவை உட்பட 49 உறுப்பினர்களை, ஜெயலலிதா காலத்தில் பெற்றிருந்தது. இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சி என்ற அங்கீகாரத்தோடு நாடாளுமன்ற மக்களவையிலும், மாநிலங்கள் அவையிலும் சிறப்புடன் பணியாற்றியதோடு ஜெயலலிதாவை தொடர்ந்து, தமிழக மக்களின் நலனுக்காக முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் இயக்கம் அ.தி.மு.க.

ஒற்றை உறுப்பினராக இருந்த ஆரம்ப காலத்திலும், மூன்றாவது பெரிய கட்சியாக இருந்த நேரத்திலும், அதனைத் தொடர்ந்தும், இந்திய தேசத்தின் ஒற்றுமைக்காகவும், நாட்டின் வளர்ச்சிக்காகவும், தமிழ் நாட்டின் உரிமைகளைப் பாதுகாத்திடவும், ஏழை, எளிய, உழைக்கும் மக்கள் மற்றும் நடுத்தர வருவாய் ஈட்டும் மக்களின் முன்னேற்றத்திற்காகவும் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்து வரும் அதிமுக அந்த சிறப்பான பணிகளைத் தொடர்ந்து நிறைவேற்றிட வேண்டும் என்ற உன்னத குறிக்கோளோடு; அராஜகத்திலும், வன்முறையிலும் கைதேர்ந்த திமுக மற்றும் பா.ஜ.கவின் பல்வேறு முறைகேடுகளையும், தில்லுமுல்லுகளையும் தாண்டி, 19.4.2024 அன்று தமிழகத்தில் சுமூகமான வாக்குப் பதிவு நடைபெறுவதற்கு முழு ஒத்துழைப்பு நல்கி தேர்தல் பணியாற்றிய தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளிட்ட அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்.

வாக்குப் பதிவு நிறைவு பெற்று, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சம்பந்தப்பட்ட வாக்கு எண்ணும் மையங்களுக்குக் கொண்டுவந்து வைக்கப்பட்டுள்ள நிலையில், வருகின்ற 4.6.2024 அன்று வாக்கு எண்ணி முடிவுகள் அறிவிக்கும் வரையிலும் கழக வேட்பாளர்களும், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களும், கழகம் மற்றும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், முகவர்களும் கவனக்குறைவாக இருந்திடாமல், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களை மிகுந்த எச்சரிக்கையுடனும், விழிப்புணர்வுடனும் இரவு பகல் பாராமல் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணித்திட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

Next Story

புகைப்படம் எடுக்க மறுத்ததால் வாக்களிக்காமல் சென்ற முன்னாள் அதிமுக எம்பி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 Former AIADMK MP abstained from voting after refusing to be photographed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆபட் மார்ஷல் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் காலையில் வாக்களிக்க சென்றார். பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்குள் அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் அவருடன் வந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த குமார் 'நான் இந்த தொகுதியில் இரண்டு முறை எம்பியாக இருந்திருக்கிறேன். விஐபிகள் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. கலெக்டரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்கிறேன்' என கூறிவிட்டு வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.