ADVERTISEMENT

பிக் பாஸ் லாஸ்லியாவிற்கு அடிக்க போகும் ஜாக்பாட்!

01:03 PM Sep 14, 2019 | Anonymous (not verified)

தனியார் தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி 80 நாட்களுக்கு மேல் கடந்து சென்று கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சி இரண்டு சீசன்களை கடந்து தற்போது மூன்றாவது சீசன் நடைபெற்று கொண்டிருக்கிறது. இரண்டு சீசன்களை போலவே மூன்றாவது சீசனும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பிக் பாஸ் சீசன் 3ல் மொத்தம் 16 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பாத்திமா பாபு, மோகன் வைத்யா, வனிதா, மீரா மிதுன், ரேஷ்மா, சரவணன், சாக்ஷி, அபிராமி, மதுமிதா மற்றும் கஸ்தூரி இதுவரை போட்டியிலிருந்து வெளியேறியுள்ளனர். பிக் பாஸ் போட்டியில் பங்கேற்ற போட்டியாளர்கள் வெளியே வந்தவுடன் அவர்களுக்கு பட வாய்ப்புகள், விளம்பர வாய்ப்புகள் மற்றும் தொலைக்காட்சியில் இருக்கும் கேம் ஷோவிலும் அதிக வாய்ப்புகள் கிடைக்கும்.

ADVERTISEMENT


ADVERTISEMENT


இந்த நிலையில் தற்போது நடைபெற்று வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளரான சரவணன் வெளியே வந்தவுடன் அவருக்கு 2015-2017 வரை வெளியான சிறந்த படங்களை தேர்வு செய்ய திரைப்பட மானியக் குழுவில் நடிகர் சரவணன் இடம் பெற்றார். இதனையடுத்து பிக் பாஸ் வீட்டில் போட்டியாளராக இருக்கும் லாஸ்லியாவிற்கு சின்னத்திரையில் மக்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்ட சீரியலின் இரண்டாம் பாகத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. அந்த வகையில் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி மற்றும் சரவணன் மீனாட்சி இந்த இரண்டு சீரியலில் எதாவது ஒன்றின் இரண்டாம் பாகத்தில் லாஸ்லிய நடிப்பார் என்று சொல்லப்படுகிறது. மேலும் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் திரைத்துறையில் லாஸ்லியாவிற்கு நல்ல வரவேற்பு இருக்கும் என்று கூறியிருந்தார் என்பது குறிப்படத்தக்கது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT