ADVERTISEMENT

பாலியல் புகார் எதிரொலி... நீதிமன்ற பணி புறக்கணிப்பு..!

03:30 PM Feb 26, 2021 | lakshmanan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த சிறப்பு காவல்துறை தலைமை இயக்குனர் ராஜேஷ் மீது கொடுக்கப்பட்டுள்ள புகார் மீது நேர்மையான புலனாய்வு செய்ய வேண்டும் என பெரம்பலூர் பார் கவுன்சில் அசோஷியேஷன் தெரிவித்துள்ளது.

மேலும் பார் கவுன்சில் அசோஷியேஷன், “பெரம்பலூரில் பணிபுரியும் பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த தமிழ்நாடு சிறப்பு காவல்துறை தலைமை இயக்குனர் ராஜேஷின் செயலை வன்மையாக கண்டிக்கிறோம். பெண் ஐபிஎஸ் அதிகாரி, அவர் மீது கொடுத்துள்ள புகாரில் வழக்குப் பதிவுசெய்து, நேர்மையான புலனாய்வு செய்ய வலியுறுத்துகிறோம். பணிபுரியும் பெண்களின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும்” உள்ளிட்டவற்றை வலியுறுத்தி, இன்று (26 பிப்.) ஒருநாள் பணி புறக்கணிப்பு நடைபெற்றது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT