ADVERTISEMENT

முட்புதருக்குள் கதறிய பெண் சிசு! கல்லூரி மாணவியின் செயலா? கள்ளக் காதலா? 

09:05 PM Jul 12, 2018 | Anonymous (not verified)

ADVERTISEMENT

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆவாரங்காடு என்ற பகுதியில் உள்ள ஒரு முட்புதரில் இன்று காலை குழந்தையின் அழுகுரல் அவ்வப்போது வந்துள்ளது. மதியம் 11 மணி சுமாருக்கு அவ்வழியாக சென்றவர்கள் அந்த புட்புதரை விளக்கி பார்த்துள்ளனர். ஒரு பச்சிளம் குழந்தை அழுது கொண்டிருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பிறகு அங்கு வந்த பெண் ஒருவர் அந்த குழந்தையை வெளியே எடுத்து வந்துள்ளார்.

ADVERTISEMENT

தொப்புள் கொடி கூட அறுக்கப்படாமல் இருந்த அந்த பெண் சிசு விடியற்காலை தான் பிறந்துள்ளது. அதை அந்த முட்புதருக்குள் வீசி விட்டு சென்றுள்ளனர். தகவல் கேள்விப்பட்டு அங்கு வந்த போலீசார் மருத்துவர்களை அழைத்து வந்து அந்த பெண் சிசுவை பள்ளிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தார்கள்.


பிறந்து ஒரே நாளான அந்த பெண் சிசுவை முட்புதரில் வீசிச் சென்றவர்கள் யார் என போலீசார் விசாரித்து வருகிறார்கள். பள்ளிபாளையம் மாறும் அருகே உள்ள திருச்செங்கோடு பகுதியில் ஏராளமான தனியார் கல்லூரிகள் கல்லூரி மாணவ மாணவியர்களின் காதல் விவகாரங்கள் இங்கு அதிகமாக நடக்கும். அப்படி ஏதாவது கல்லூரி மாணவி தன் வீட்டுக்கு தெரியாமல் கர்பத்தை மறைத்து அதன் மூலம் பெற்றெடுத்த குழந்தையா? அல்லது ஏதாவது கள்ளக் காதல் மூலம் பிறந்த குழந்தையா? அல்லது பிறந்தது பெண் குழந்தை என்பதால் பிடிக்காமல் வீசிச் சென்றனரா? எதுவாக இருந்தாலும் பெற்றெடுத்த பெண் சிசுவை வீசிச் சென்ற கல் நெஞ்சம் யார்? இது எந்த மருத்துவமனையில் பிரசவம் பார்க்கப்பட்டது என தீவிர விசாரனையில் உள்ளார்கள் போலீசார் .

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT