ADVERTISEMENT

சொத்துக்குவிப்பு வழக்கு; அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் விடுவிப்பு

02:42 PM Jul 20, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அதிமுக ஆட்சியின் போது வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், அவரது மனைவி மற்றும் தொழிலதிபர் சண்முக மூர்த்தி ஆகிய 3 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. இது தொடர்பான வழக்கு விசாரணை விருதுநகர் முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் இன்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவரது மனைவி மற்றும் தொழிலதிபர் சண்முக மூர்த்தி ஆகிய மூவரையும் விருதுநகர் மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி திலகம் விடுவித்து உத்தரவிட்டுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT