Skip to main content

அமைச்சர் மனுவால் தட்டிய விவகாரம்! - பா.ஜ.க. நடத்திய போராட்டம்!

Published on 14/07/2022 | Edited on 14/07/2022

 

The issue knocked by Minister Manu!- Fake BJP. The struggle!

 

விருதுநகர் மாவட்டம், பாலவநத்தத்தில் நடந்த அரசு நிகழ்ச்சி ஒன்றில், தன்னுடைய தாயாருக்கு முதியோர் உதவித்தொகை கேட்டு மனு அளிக்க வந்திருந்தார் கலாவதி. தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆருக்கு தூரத்து உறவினரான கலாவதி மனு அளித்தபோது, ‘பரிசீலித்து நடவடிக்கை எடுப்போம்’ என கே.கே.எஸ்.எஸ்.ஆர். கூறியும், சொன்னதையே திரும்பத்திரும்பத் தெலுங்கில் சொன்னபடியே இருந்தார். உறவினர் என்ற வகையில் தன் வீட்டுக்கெல்லாம் வரும் கலாவதியின் இந்தச் செயல் கே.கே.எஸ்.எஸ்.ஆருக்கு எரிச்சலூட்ட,‘அதான்.. பார்த்துப் பண்ணிருவோம்னு சொல்லுறேன்ல..’ என்று உரிமையுடன் அந்த மனுவாலேயே கலாவதியின் தலையில் தட்டினார். 

 

The issue knocked by Minister Manu!- Fake BJP. The struggle!

இந்தக் காட்சியை செல்போனில் பதிவுசெய்த யாரோ ஒருவர், ‘மனு அளிக்க வந்த பெண்ணை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். அடித்தார்’ என்று வலைத்தளத்தில் பரப்பி வைரலாக்கிவிட, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ‘மக்கள் என்ன உங்கள் அடிமைகளா?’ எனக் கேள்வி எழுப்பி ‘அடுத்த 48 மணி நேரத்திற்குள் அமைச்சர் பதவி விலகவேண்டும். அல்லது அவரது வீட்டை முற்றுகையிடுவோம்.’ என ட்விட்டரில் தெரிவித்தார். 

 

அந்தக் கால அரசியல்வாதியான கே.கே.எஸ்.எஸ்.ஆர்., எந்தக் கூட்டத்திலும் கட்சித் தொண்டரின் பெயரைச் சொல்லி அழைப்பது, தொண்டனோ, பொதுஜனமோ தோளில் கைபோட்டு பேசுவது, உரிமையுடன் செல்லமாகத் திட்டுவதையெல்லாம், தனக்கே உரிய பாணியில் தொடர்ந்து கடைப்பிடித்து, யாருடைய மனதிலும் எளிதாக இடம்பிடித்துவிடுவதை வழக்கமாகக் கொண்டவர். கலாவதி தூரத்து உறவினர் என்ற உரிமையில், தான் மனுவால் தலையில் தட்டியதைப்போய் அரசியலாக்குகிறார்களே என்று ஆதங்கப்பட்டார். 

The issue knocked by Minister Manu!- Fake BJP. The struggle!

கலாவதியும் மீடியாக்களிடம் “அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். எனக்கு அண்ணன் முறை. அவர் என்னை அடிக்கவில்லை. நான் அளித்த மனு மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.” என்று அடித்ததாகக் கிளம்பிய விவகாரத்துக்கு விளக்கம் தந்து முற்றுப்புள்ளி வைத்தார். 

 

ஆனாலும், அறிவித்தபடி முற்றுகைப் போராட்டம் தொடரும் என பா.ஜ.க. வம்புக்கு நின்றது. விருதுநகர் ராமமூர்த்தி சாலையிலுள்ள அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். வீட்டு முன்பாக பா.ஜ.க.வினர் கூடுவார்கள் என்பதை அறிந்திருந்த காவல்துறை, நகரின் பல்வேறு பகுதிகளையும் கண்காணித்தது. ராமமூர்த்தி சாலையிலுள்ள பத்திரப்பதிவுத்துறை அலுவலகம் முன்பாக பாஜகவினர் திரண்டு அமைச்சர் வீட்டை முற்றுகையிட முயற்சித்தபோது, காவல்துறையினரோடு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து, பா.ஜ.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களைக் கைதுசெய்த காவல்துறை, தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளது.

 

எந்த ஒரு விவகாரத்தையும் அரசியலாக்கியே தீருவது என்ற பா.ஜ.க.வின் இந்த நிலைப்பாட்டால், விருதுநகரில் தற்காலிகமாக போக்குவரத்தை காவல்துறை மாற்றியமைக்க, பள்ளி மாணவர்களும் பொதுமக்களும் சிரமத்துக்கு ஆளானார்கள்.  

 

சொல்லிக்கொள்ளும் அளவுக்கு யார் மீதும் எந்தத் தாக்குதலும் நடக்கவில்லை. சம்பந்தப்பட்டவரே, ‘அமைச்சர் எனக்கு அண்ணன் உறவுமுறை. அவர் எங்கே என்னை அடித்தார்?’ என்று விளக்கம் தந்தும், ‘அதெல்லாம் ஏற்கமுடியாது’ எனத்  தங்கள் இருப்பைக் காட்டிக்கொள்ளப் போலியாக ஒரு போராட்டத்தை பா.ஜ.க.வினர் பட்டவர்த்தனமாக நடத்தியுள்ளனர்.  

 
 

சார்ந்த செய்திகள்

Next Story

திடீரென மயங்கி விழுந்த நிதின் கட்கரி; பிரச்சாரத்தில் பரபரப்பு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Nitin Gadkari suddenly fainted on the campaign platform

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதே நேரத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தைப் பொருத்தவரை ஐந்து கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி 5 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், வரும் 26 ஆம் தேதி  இரண்டாம் கட்டமாக 8 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. யவத்மால் தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் ஏக்நாத் ஷிண்டே சிவசேனா கட்சியின் வேட்பாளர் ராஜஸ்ரீ பாட்டில் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில் புசாத் நகரில் ராஜஸ்ரீ பாட்டிலை ஆதரித்து பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கலந்துகொண்டார். அப்போது பிரச்சார மேடையில் திடிரென நிதின் கட்கரி மயங்கி விழுந்தார். உடனடியாக அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு சிறிது நேரம் இடைவெளிக்கு பிறகு மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பினார். பின்பு பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய நிதின் கட்கரி ராஜஸ்ரீ பாட்டிலுக்கு வாக்கு சேகரித்தார்.

இந்தநிலையில், வெப்பம் காரணமாக உடல்நிலை பாதிப்பு எற்பட்டது என்றும், தற்போது நலமாக இருப்பதாகவும் கூறியுள்ள நிதின் கட்கரி உங்கள் அன்பிற்கு நன்றி என்று என்று தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Next Story

ரூ. 4 கோடி பறிமுதல் விவகாரம்; வெளியான பகீர் வாக்குமூலம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Rs 4 crore confiscation issue confession

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்த பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

மேலும் இந்த பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தம் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரை அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” என தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு சம்மன் அனுப்ப காவல்துறை முடிவு செய்துள்ளது.