ADVERTISEMENT

அரக்கோணம் இரட்டைக் கொலை! - திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம்! 

05:32 PM Apr 10, 2021 | tarivazhagan

ADVERTISEMENT


அரக்கோணம் அருகே நடைபெற்ற 2 தலித் இளைஞர்கள் கொலையில் உண்மை குற்றவாளிகளை‌க் கைது செய்யவும், பாமகவை தடை செய்ய வலியுறுத்தியும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ADVERTISEMENT

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த சோகனூர் காலனியில் கடந்த 6-ஆம் தேதி தேர்தல் முன் விரோதம் காரணமாக இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் தலித் இளைஞர்கள் அர்ஜுனன், சூர்யா ஆகிய இருவர் படுகொலை செய்யப்பட்டனர். அவர்களது குடும்பத்தினரை நேரில் சென்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஆறுதல் கூறினார். இதனைத் தொடர்ந்து கொலை சம்பவத்தின் உண்மை குற்றவாளிகளை‌க் கைது செய்ய வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் இன்று தமிழகம் முழுவதும் கண்டனப் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் அறிவித்தார்.

அதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சிந்தாமணி அண்ணாசிலை அருகில் தொழிலாளர் விடுதலை முன்னணி சார்பில் போராட்டம் நடைபெற்றது. இதற்குத் தொழிலாளர் விடுதலை முன்னணி மாநிலத் துணைச் செயலாளர் பிரபாகரன் தலைமை தாங்கினார். வடக்கு மாவட்டச் செயலாளர் நீலவண்ணன் முன்னிலை வகித்தார். இதில், விடுதலைச் சிறுத்தைகளுக்கு ஆதரவாக மக்கள் அதிகாரத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் ராஜா, செழியன், அனந்த், மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் நிர்வாகிகள் ஜீவா, லதா, திராவிடர் விடுதலைக் கழகம் மாவட்ட அமைபாளர் புதியவன், ஜனநாயக சமூக நலக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சம்சுதீன் ஆகியோர் கலந்துகொண்டனர். கண்டன ஆர்ப்பாட்டத்தில், தலித் இளைஞர்களை கொலை செய்த உண்மை குற்றவாளிகளை கைது செய்யவும், பாட்டாளி மக்கள் கட்சியைத் தடை செய்யவும் வலியுறுத்தி, உரிய நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை வைத்தனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT