ADVERTISEMENT

கலை, அறிவியல் படிப்புகளில் சேர ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்... -தமிழக அரசு அறிவிப்பு!!

06:19 PM Jul 16, 2020 | kalaimohan

ADVERTISEMENT

தமிழகத்திலுள்ள கலை, அறிவியல் படிப்புகளில் சேருவதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

இன்று காலை 9.30 மணிக்கு +2 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது. முதல் முறையாக கலை, அறிவியல் படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.

கலை, அறிவியல் படிப்புகளில் சேர www.tngasa.in மற்றும் Www.tndceonline.org என்ற இணையதளத்தில் ஜூலை 20 ஆம் தேதி முதல் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். தொழிநுட்ப கல்லூரிகளில் சேர www.tngptc.in மற்றும் www.tngptc.com என்ற இணையத்தளங்களில் விண்ணப்பிக்கலாம். மேலும் இதுகுறித்த சந்தேங்கள் இருந்தால் 044-22351014 மற்றும் 044-223510115 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை பொறியியல் படிப்புகளில் சேர தமிழக அரசு ஆன்லைன் முறையை வெளியிட்டிருந்த நிலையில் கலை, அறிவியல் படிப்புகளில் சேருவதற்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT