ADVERTISEMENT

இயக்குநர் ஷங்கருக்கு தடை விதிக்கக்கோரி மேல்முறையீடு!

10:59 AM Apr 15, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் அறிவிக்கப்பட்ட திரைப்படம் ‘இந்தியன் 2’. இந்த திரைப்படத்தின் ஷூட்டிங் கடந்த ஆண்டு நடைபெற்ற நிலையில், படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. ‘இந்தியன் 2’ திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்த நிலையில், ஷூட்டிங் நிறுத்தப்பட்டது. இதனால் இயக்குனர் ஷங்கர் வேறு சில படங்களை இயக்கப்போவதாக அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். குறிப்பாக, நேற்று (14.04.2021) ‘அந்நியன்’ படத்தை ரீமேக் செய்ய இருப்பதாக இயக்குநர் ஷங்கர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், “‘இந்தியன் 2’ படத்திற்கு பல கோடிகள் செலவு செய்துள்ளதால், ‘இந்தியன் 2’ படத்தை முடிக்காமல் பிற படங்களை ஷங்கர் இயக்கக்கூடாது. இதை முடிக்காமல் அவர் வேறு படத்தை இயக்க தடை விதிக்க வேண்டும்” என எதிர்ப்பு தெரிவித்துள்ள லைகா படத்தயாரிப்பு நிறுவனம், நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இதுதொடர்பாக வழக்கில் ஏற்கனவே தனி நீதிபதிகள் தடைவிதிக்க மறுத்த நிலையில், தற்போது லைகா தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT